மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியானது - 142 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (31) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் நேற்றையதினம் 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான  சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.