(CBC TAMIL - COLOMBO) - எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜ்பஸ்கஹ் அறிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அவர் இன்று (11) விஜேராமவிலுள்ள இல்லத்தில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன நிதஹஸ் சந்தானய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015 பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஷ 423,529 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.
0 Comments