உலகத்தையே தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே யுத்தத்தாலும் பல்வேறு இடர்களில் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கொரோனா வைரஸானது பாதிப்பை ஏற்படுத்துமேயாயின் வடக்கில் பாரிய உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் எனினும் மீண்டும் அவ்வாறு அழிவினை நாம் எதிர்நோக்க அதற்கு இடமளிக்க முடியாது எனவும் கூறினார்.
தமிழ் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடர்பாக அரசினால் வெளியிடப்பட்டுவரும் அறிவுறுத்தலுக்கு அமைய அதனைப் பின்பற்றி பொது வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து தேவையற்ற நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருந்து தத்தமது கடமைகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் பொதுமக்கள் பொது வெளியில் ஒன்று கூடுவதை தவிர்க்க முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். யுத்தத்தினால் நாம் பல உயிர்களை இழந்து உள்ளோம் பல சொத்துக்களை இழந்து உள்ளோம் அதேபோல்தான் வைரஸானது ஒரு அழிவை ஏற்படுத்தும் நோயாக உலக நாடுகளில் பரவி வருகின்றது.
எனினும் நமது தமிழ் பிரதேசங்களில் இன்று வரை எவருக்கும் கொரோனா ஏற்படவில்லை என்று இருக்காது குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இடமிருந்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
0 Comments