கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 3 ஆவது நபரும் குணமடைந்தார்!
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் (3ஆவது) குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டி மற்றும் சீனப்பெண் ஆகியோர் சிகிச்சைகளின் பின்னர் முற்றாக குணமைடைந்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
