மேலும் 04 பேருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை 471 ஆனது

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 120 ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றுமட்டும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது