இன்றுமட்டும் 59 பேருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை 582 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 126 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றுமட்டும் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
