13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது!!!
நுரைச்சோலை பகுதியில் 13 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை காப்பாற்றிய பொலிஸார், சிறுமியின் தந்தை மற்றும் அத்தை ஆகியோரை கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் இரண்டாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
