பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் - அரசாங்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பயணங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.