கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 40 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் 07 கடற்படையினர் மற்றும் கடற்படைவீரருடன் நெருங்கிய தொடர்புடையவர் ஒருவர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் நேற்றுமட்டும் மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments