சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.