புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது - சிறுவர் பூங்காக்களை திறக்க அனுமதி
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளில் மேலதிக தளர்வுகளுடன் திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலை சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளான
அதன்படி
- ஹொட்டல்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் செயற்பட அனுமதி
- சிறுவர் பூங்காக்கள் திறப்பு
- வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்காக்கள் திறப்பு
- உட்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி
இருப்பினும், வெளிப்புற இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
